செய்திகள்

தேர்தலுக்காக மட்டுமே அம்பேத்கரை நினைவில் வைக்கும் கட்சி காங்கிரஸ் - அமித் ஷா

Published On 2018-10-04 23:07 GMT   |   Update On 2018-10-04 23:07 GMT
காங்கிரஸ் கட்சி தேர்தலுக்காக மட்டுமே அம்பேத்கரை நினைவில் வைத்துள்ளது என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். #AmitShah #Ambedkar
ஜெய்ப்பூர்:

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பிகானீரில் நேற்று நடைபெற்ற எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான பொதுக் கூட்டத்தில் தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியாதாவது:

குறிப்பிட்ட சமூகத்திற்கு ஆதரவாக செயல்படும் கட்சி பா.ஜ.க. அல்ல. இந்த மாநிலத்தில் ஆளும் வசுந்தரா ராஜே சிந்தியா அரசு தாழ்த்தப்பட்டவரர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறது.

ஆனால், எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வரும் போதுதான் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பற்றியும், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் பற்றியும் நினைவுக்கு வரும். ஆட்சியில் அமர்ந்ததும் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விடுவார்கள் என குற்றம் சாட்டினார். #AmitShah #Ambedkar
Tags:    

Similar News