செய்திகள்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

Published On 2018-09-28 11:14 GMT   |   Update On 2018-09-28 11:14 GMT
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்டு இருந்த இடைக்காலத்தடை அக்டோபர் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #PChidambaram #INXMediaCase #DelhiHighCourt
புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு விதிமுறைகளை மீறி, அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்தது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரமும் இணைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதையடுத்து, ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை விதிக்கக்கோரிய மனுவை ஏற்ற டெல்லி நீதீமன்றம், இடைக்கால தடை விதித்து இருந்தது. பல கட்டங்களாக நீட்டிக்கப்பட்ட இந்த இடைக்காலத்தடை கடைசியாக செப்டம்பர் 28 வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், ப.சிதம்பரம் மீதான இடைக்கால தடை மீது இன்று மீண்டும் விசாரணை நடைபெற்ற நிலையில், அவரை கைது செய்ய விதிக்கப்பட்டு இருந்த இடைக்கால தடையை அக்டோபர் 25 வரை நீட்டித்து டெல்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #PChidambaram #INXMediaCase #DelhiHighCourt
Tags:    

Similar News