செய்திகள்

சிறைச்சாலையை சீரமைக்க முன்னாள் நீதிபதி தலைமையில் மூவர் குழு - உச்சநீதிமன்றம்

Published On 2018-09-25 07:48 GMT   |   Update On 2018-09-25 07:48 GMT
சிறைச்சாலையில் ஏற்படும் முறைகேடுகள் போன்றவை குறித்து ஆய்வு செய்து சீரமைக்க முன்னாள் நீதிபதி அமிடாவா ராய் தலைமையில் மூவர் குழுவை இன்று உச்சநீதிமன்றம் ஏற்படுத்தியுள்ளது. #SupremeCourt
புதுடெல்லி:

சிறையில் கைதிகளுக்கு ஏற்படும் மனித உரிமை மீறல்கள், சிறையில் கைதிகளின் அதிக எண்ணிக்கை மற்றும் அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகங்கள் போன்றவற்றை கட்டுக்குள் கொண்டுவர சிறைத்துறை சீரமைப்பு குழு ஒன்றை உச்சநீதிமன்றம் உருவாக்க முடிவு செய்திருந்தது.

இதற்கான உத்தரவை கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி ஒத்திவைத்தது. இந்நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள் நீதிபதி அமிடாவா ராய் தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மூவர் குழுவானது நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளை சீரமைப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கும் எனவும், சிறைச்சாலைகளை ஆய்வு செய்து உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #SupremeCourt
Tags:    

Similar News