செய்திகள்

கேரள பாதிரியார் முல்லக்கல் விவகாரம் - போராட்டத்தில் ஈடுபட்டதால் பணி இழந்த கன்னியாஸ்திரி

Published On 2018-09-23 11:22 GMT   |   Update On 2018-09-23 11:22 GMT
கேரள மாநிலத்தில் கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிரியாரை கைது செய்ய வலியுறுத்தி போராடிய கன்னியாஸ்திரியை மீண்டும் பணியில் சேர்க்க வயநாடு தேவாலயம் மறுப்பு தெரிவித்துள்ளது. #Kerala #KeralaNun
திருவனந்தபுரம்:

கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவரை பிராங்கோ முல்லக்கல் என்ற பாதிரியார் 13 முறை பாலியல் வன்புணர்வு செய்ததாக கன்னியாஸ்திரி குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாஸ்திரியின் புகாரை ஏற்று பாதிரியாரை கைது செய்யவும் வலியுறுத்தப்பட்டது.

பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கன்னியாஸ்திரிகள் பலர் கேரள உயர்நீதிமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சமீபத்தில் கேரள பாதிரியார் கைது செய்யப்பட்டு 3 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



இதையடுத்து கன்னியாஸ்திரிகளின் காலவரையற்ற போராட்டம் நேற்று முடிவுக்கு வந்தது. போராட்டத்தில் கலந்துகொண்ட கன்னியாஸ்திரிகளில் ஒருவரான லூசி கலப்புரா, வயநாடு மாவட்டத்தில் உள்ள சிரோ மலபார் கதோலிக்க தேவாலயத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இதையடுத்து இன்று காலை கொச்சியில் இருந்து வயநாடுக்கு வந்த கன்னியாஸ்திரி லூசியை தேவாலய பணிகளில் ஈடுபட வேண்டாம் என சர்ச் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கன்னியாஸ்திரி லூசி, எந்த வித எழுத்துப்பூர்வமான அறிவிப்பும் அளிக்காமல், காரணங்களும் சொல்லாமல், தேவாலய பணிகளில் ஈடுபட கூடாது என வாய்மொழியாக மட்டுமே கூறி, தம்மை வெளியேற்றிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தேவாலய நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் வலுத்து வருகிறது. #Kerala #KeralaNun 
Tags:    

Similar News