செய்திகள்

துபாயில் இருந்து மும்பை வந்த விமான கழிப்பறையில் ரூ.26 லட்சம் தங்கம் சிக்கியது

Published On 2018-09-08 15:07 GMT   |   Update On 2018-09-08 15:07 GMT
துபாயில் இருந்து இன்று மும்பை வந்து சேர்ந்த விமானத்தின் கழிப்பறையில் கேட்பாரற்று கிடந்த 8 தங்கக் கட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். #MumbaiAirport #Rs26lakhsgold
மும்பை:

துபாயில் இருந்து இன்று மும்பை வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ரகசியமாக தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

இதையடுத்தும், அந்த விமானத்தில் வந்த பயணிகள் தரையிறங்கியதும் தீவிரமாக அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். இதில் பெரிதாக ஒன்றும் பிடிபடாததால் அவர்கள் வந்த விமானத்தின் இருக்கை மற்றும் கழிப்பறைகளை அதிகாரிகள் துல்லியமாக சோதனையிட்டனர்.

அப்போது,  கழிப்பறையில் கேட்பாரற்று கிடந்த 8 தங்கக் கட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். அவற்றின் உள்நாட்டு சந்தை மதிப்பு சுமார் 26 லட்சம் என தெரிவித்த அதிகாரிகள் இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். #MumbaiAirport #Rs26lakhsgold
Tags:    

Similar News