செய்திகள்

விசாரணைக்குழு அமைக்க பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை - ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக அரசு அப்பீல்

Published On 2018-08-30 06:23 GMT   |   Update On 2018-08-30 06:23 GMT
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. #Sterlite #SterliteCase #NGT
புதுடெல்லி:

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்துள்ளது.  இவ்வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்யவேண்டும் என உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஜே.வசீப்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.



இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், இது போன்ற விசாரணை ஆணையம் அமைக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லை  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Sterlite #SterliteCase #NGT
Tags:    

Similar News