செய்திகள்

கேரளாவில் வெள்ள நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற சீமானிடம் போலீசார் விசாரணை

Published On 2018-08-26 05:28 GMT   |   Update On 2018-08-26 05:39 GMT
கேரளாவுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் அம்மாநில போலீசார் விசாரணை நடத்தினர். #Kerala #Seeman
திருவனந்தபுரம்:

கேரளாவில் வரலாறு காணாத அளவு பெய்த மழையினால் 14 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு கேரளா திரும்பி வரும் நிலையில், அவர்களின் அன்றாட தேவைகளுக்கு உதவும் விதமாக பல்வேறு அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் மற்றும் மாநில அரசுகள் உதவி செய்து வருகின்றன.

இந்நிலையில் கேரள மக்களுக்கு உதவி புரியும் வகையில் 30ற்கும் மேற்பட்ட வாகனங்களில் சுமார் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெள்ள நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு நாம் தமிழர் கட்சியினர் கோட்டயம் மாவட்டம் சென்றனர். சங்கனாச்சேரி பகுதியில் வெள்ள நிவாரணப் பொருட்களை மக்களுக்கு கொடுக்க முற்பட்ட போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் படம் பொறித்த பதாகைகள் இருந்ததால் சர்ச்சை உருவாகியது.

இதனால் ஏற்பட்ட சலசலப்பின் காரணமாக சீமான் மற்றும் அவருடன் சென்ற நாம் தமிழர் கட்சியினர் அனைவரையும் விசாரணைக்காக கோட்டயம் மாவட்டக் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர் .

பல மணி நேர விசாரணைக்குப் பின்பு நாம் தமிழர் கட்சியினர் வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு போலீசார் அனுமதி அளித்தார்கள். விசாரணைக்குப் பின்பு சீமான்தமிழகம் திரும்பினார்.
Tags:    

Similar News