செய்திகள்

காஷ்மீர் எல்லைப்பகுதியில் கண்ணிவெடி விபத்தில் ராணுவ வீரர் உயிரிழப்பு

Published On 2018-08-25 14:30 IST   |   Update On 2018-08-25 14:30:00 IST
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் கண்ணிவெடி விபத்தில் இந்திய ராணுவத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். #LoC #mineblast
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் உள்ள கேரன் எல்லைக்கோட்டுப்பகுதியில் நேற்றிரவு இந்திய வீரர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்து சிதறியதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த இரு வீரர்கள் காயம் அடைந்தனர்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களில் ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். #LoC #mineblast
Tags:    

Similar News