செய்திகள்

டெல்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

Published On 2018-08-25 04:05 GMT   |   Update On 2018-08-25 04:05 GMT
டெல்லியின் நங்லாய் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து 25 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். #DelhiFire
புதுடெல்லி:

டெல்லி நங்லாயில் உள்ள நரேஷ் பார்க் பகுதியில் மூன்று தளங்கள் கொண்ட பிளாஸ்டிக் தொழிற்சாலை உள்ளது. இங்கு பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் தீப்பிடித்துள்ளது. பிளாஸ்டிக் பைகள் மற்றும் மூலப் பொருட்கள் பற்றி எரியத்  தொடங்கின. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.



இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் 25 வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. #DelhiFire
Tags:    

Similar News