செய்திகள்

உ.பி.யில் தொலைபேசிக்கான கண்ணாடி இழைகளை பதித்தபோது களிமண் சரிந்து விழுந்து 5 பேர் பலி

Published On 2018-07-30 20:41 GMT   |   Update On 2018-07-30 20:41 GMT
உத்தரப்பிரதேசத்தில் தொலைபேசிக்கான கண்ணாடி இழைகளை பதிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது களிமண் சரிந்தௌ விழுந்ததில் 5 பேர் பலியாகினர். #Accident
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பிலிபிட் பைபாஸ் சாலையில் தொலைபேசிக்கான கண்ணாடி இழைகள் போடப்படும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், நேற்று இரவு சில தொழிலாளர்கள் அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாரா விதமாக பள்ளம் தோண்டிய களிமண் திடீரென சரிந்து விழுந்தது. இதில் அங்கு பணியில் இருந்த 5 தொழிலாளர்கள் களிமண்ணில் சிக்கி பரிதாபமாக பலியாகினர்.

இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்கு மேற்பார்வை செய்த சூப்பர்வைசரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொலைபேசி இணைப்புக்காக பள்ளம் தோண்டியபோது களிமண் சரிந்து விழுந்து 5 தொழிலாளிகள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News