செய்திகள்

நாகாலாந்து கல்லூரியில் வாட்டர் ஏடிஎம் அறிமுகம்

Published On 2018-07-30 01:18 GMT   |   Update On 2018-07-30 01:18 GMT
நாகாலாந்து மாநிலத்தில் உள்ள கோஹிமா கல்லூரியில் மாணவர்கள் வசதிக்காக வாட்டர் ஏடிஎம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #WaterATM
கோஹிமா:

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று நாகாலாந்து. இதன் தலைநகரம் கோஹிமா. இங்குள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தண்ணீர் குடிப்பதற்கு வசதியாக வாட்டர் ஏடிஎம் அமைக்கப்படும் என உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி துறை மந்திரி அறிவித்தார்.

அதன் ஒரு பகுதியாக, கோஹிமா நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் நேற்று வாட்டர் ஏடிஎம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்த ஏடிஎம்மில் ஒரு லிட்டர் தண்ணீர் ஒரு ரூபாய்க்கு கிடைக்கும். இந்த கருவியை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி, அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் ஐந்து ரூபாய்க்கு 5 லிட்டர் குடிநீர் கிடைக்கும்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்த ஏடிஎம் வெற்றியை பொறுத்துதான் பல்வேறு இடங்களில் இதை அமைப்பது குறித்து பரீசிலிக்கப்படும் என்றார். #WaterATM
Tags:    

Similar News