செய்திகள்

மசூதியில் ஸ்பீக்கர்கள் ஏன்? - ராஜ் தாக்கரேவின் கேள்விக்கு சுப்பிரமணியசாமி கண்டனம்

Published On 2018-07-28 09:59 GMT   |   Update On 2018-07-28 09:59 GMT
முஸ்லிம்கள் தொழுகைக்கான அழைப்பு விடுக்க ஸ்பீக்கர்களை பயன்படுத்துவதை விமர்சித்த ராஜ் தாக்கரேவுக்கு சுப்பிரமணிய சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார். #SubramaniyaSwami #RajThackeray
புதுடெல்லி:

மகாராஷ்டிரா மாநிலத்தின் நவ்நிர்மண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, முஸ்லிம்கள் தொழுகைக்கான அழைப்பு விடுக்க ஸ்பீக்கர்களை பயன்படுத்துவது ஏன்? என கேள்வி எழுப்பி இருந்தார். மேலும், தொழுகை நடத்த விரும்பினால் அவர்கள் வீட்டிலேயே தொழுதுகொள்ளட்டும் எனவும் ராஜ் தாக்ரே கூறியிருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதுதொடர்பாக பேசிய இந்திய முஸ்லிம்கள் தனிநபர் சட்ட வாரியத்தின் உறுப்பினர் ஃபரூக்கி, முஸ்லிம்கள் தங்கள் தொழுகைக்கு அழைப்பு விடுக்க ஸ்பீக்கர் உபயோகிப்பதை தவறு என நினைத்தால், இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களின் சடங்குகளையும் அவர் தடை செய்யவேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.



இந்த நிலையில், ராஜ்தாக்கரேவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, ராஜ் தாக்கரேவின் இந்த கருத்து முற்றிலும் அரசியல் நோக்கமுடையது என விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவில்  முதன்மை கட்சிகளில் ஒன்றாக இருக்கும் சிவசேனாவுடன் போட்டி போடுவதை வெளிக்காட்டவே ராஜ் தாக்கரே இவ்வாறு கூறியதாக சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். #SubramaniyaSwami #RajThackeray
Tags:    

Similar News