செய்திகள்

வதந்திகள் பரவுவதை தடுக்க மணிப்பூரில் இண்டர்நெட் சேவை 5 நாள் நிறுத்தம்

Published On 2018-07-20 09:46 GMT   |   Update On 2018-07-20 09:46 GMT
அவதூறான செய்திகள் மற்றும் வீடியோக்களை பரவுவதை தடுக்கும் வகையில் மணிப்பூர் மாநிலத்தில் இன்று முதல் அடுத்த 5 தினங்களுக்கு இண்டர்நெட்சேவை நிறுத்தப்பட்டுள்ளது. #Internet
இம்பால்:

மணிப்பூர் மாநிலத்தின் உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் ரகுமணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவியதன் மூலம் அடிதடி மற்றும் வன்முறைகள் ஏற்பட்டன. இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது.

எனவே, இதுபோன்ற அவதூறான தகவல்கள் மற்றும் வீடியோக்கள் பரவுவதை தடுக்கும் வகையில் இன்று முதல் அடுத்த ஐந்து தினங்களுக்கு மொபைல் இண்டர்நெட்சேவை தடை செய்யப்பட்டு உள்ளது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்ப்டுகிறது என தெரிவித்துள்ளது. #Internet 
Tags:    

Similar News