செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் - 10 பேர் பலி

Published On 2018-07-10 14:15 IST   |   Update On 2018-07-10 14:15:00 IST
ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #AfghanBlast
காபூல் :

ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் நகரில் இருக்கும் பெட்ரோல் பங்க் அருகே திடீரென இன்று பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. தற்கொலைப்படை நடத்திய இந்த தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், படுகாயம் அடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. #AfghanBlast
Tags:    

Similar News