செய்திகள்

சுதந்திரப் போராட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எந்த பங்கும் இல்லை: பாஜக எம்.பி. பேச்சால் பரபரப்பு

Published On 2018-07-07 00:43 GMT   |   Update On 2018-07-07 00:43 GMT
மகாராஷ்டிராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக எம்.பி. கோபால் ஷெட்டி, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எந்த பங்கும் இல்லை என பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #BJPMP #GopalShetty #Christians
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் மலாடில் நடந்த முகமது நபி பிறந்தநாள் விழா கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் மும்பை வடக்கு தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. கோபால் ஷெட்டி கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், இந்திய விடுதலை போராட்டத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து இந்தியாவிற்கு விடுதலை வாங்கி தந்தனர். இதில் கிறிஸ்தவர்களுக்கு எந்த பங்கும் இல்லை. கிறிஸ்தவர்கள் என்பவர்கள் ஆங்கிலேயர்கள். அந்நியர்களான அவர்களுக்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் சிறு பங்கு கூட கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

பாஜக எம்.பி.யின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடந்து, அவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, பாஜக எம்.பி.யின் சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கோபால் ஷெட்டி சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக பேசி வருகிறார். வரலாறு தெரியாமல் அவர் பேசியுள்ளார். சுதந்திர போராட்டத்தில் கிறிஸ்தவர்கள் ஆற்றிய சேவையை அவர் அறிந்துகொள்ள வேண்டும். எனவே, அவரது கருத்துக்கு கிறிஸ்தவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. #BJPMP #GopalShetty #Christians
Tags:    

Similar News