செய்திகள்

ஜனாதிபதி, பிரதமர் மோடியுடன் பூட்டான் பிரதமர் சந்திப்பு

Published On 2018-07-06 14:04 GMT   |   Update On 2018-07-06 14:04 GMT
அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பூட்டான் பிரதமர் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #RamNathKovind #BhutanPM
புதுடெல்லி:

பூட்டான் நாட்டின் பிரதமர் டாஷோ ட்ஷெரிங் டோக்பே 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜை நேற்று அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை  இன்று அவர் சந்தித்தார்.



டோக்லாம் எல்லை விவகாரம் உட்பட இந்தியா - பூட்டான் இடையிலான பல்வேறுகட்ட உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக அவர்களுடன் ஆலோசனை  டாஷோ ட்ஷெரிங் டோக்பே நடத்தினார். #RamNathKovind #BhutanPM  
Tags:    

Similar News