செய்திகள்

குழந்தை கடத்தல் கும்பல் என கொல்லப்பட்டவர்கள் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் - பட்னாவிஸ்

Published On 2018-07-02 11:58 GMT   |   Update On 2018-07-02 11:58 GMT
மகாராஷ்டிராவில் குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகித்து அடித்துக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க முதல் மந்திரி உத்தரவிட்டுள்ளார். #Dhulelynching #suspicionofchildlifters
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம், துலே மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் கிராமமான ரெயின்பாதாவிற்கு வெளியூரை சேர்ந்த சில புதிய நபர்கள்நேற்று பேருந்தில் வந்திறங்கினர்.

அவர்களில் ஒருவர், பேருந்து நிறுத்ததில் இருந்த குழந்தையிடம் சாதாரணமாக பேச முயற்சித்துள்ளார். ஆனால், அவர்களை குழந்தை கடத்தல்காரர்கள் என சந்தேகித்த அப்பகுதி மக்கள் புதிய நபர்களை கொடூரமாக தாக்க தொடங்கினர். இந்த தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகித்து அடித்துக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்கப்படும் என மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று அறிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேவேந்திர பட்னாவிஸ், சில குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். #Dhulelynching #suspicionofchildlifters
Tags:    

Similar News