செய்திகள்

சர்வதேச யோகா தினம் - டேராடூனில் பிரதமர் மோடி யோகா பயிற்சிகள் மேற்கொண்டார்

Published On 2018-06-21 02:37 GMT   |   Update On 2018-06-21 02:42 GMT
சர்வதேச யோகா தினத்தை ஒட்டி டேராடூனில் உள்ள வனத்துறை ஆராய்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி யோகா பயிற்சிகளை மேற்கொண்டார். #InternationalYogaDay2018
டோராடூன்:

பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா.சபை 2015-ம் ஆண்டில் அறிவித்தது. இதை பின்பற்றி உலக நாடுகளில் ஆண்டுதோறும் பல பகுதிகளில் யோகாசன முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

அவ்வகையில், இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினத்தன்று உத்தரகாண்ட் மாநில தலைநகரான டேராடூன் நகரில் உள்ள வனத்துறை ஆராய்சி மையத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி இன்று நடந்தது. பிரதமர் மோடி, மற்ற மாணவர்கள் அதிகாரிகளுடன் யோகா பயிற்சி மேற்கொண்டார். சுமார் 55 ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 



முன்னதாக அவர் பேசும் போது, யோகா உலகம் முழுவதையும் இணைக்கும் ஒரு கருவியாகி உள்ளதாக கூறினார். இதேபோல, நாட்டின் பல்வேறு நகரங்களில் யோகா நிகழ்ச்சி நடந்து வருகிறது. ராணுவ தளங்கள், போர்க்கப்பல்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு படை வீரர்கள் யோகா செய்து வருகின்றனர். 
Tags:    

Similar News