செய்திகள்

சமூக நல்லிணக்கம், ஒற்றுமையின் பிணைப்பு வலுவாகட்டும் - மோடி ரம்ஜான் வாழ்த்து செய்தி

Published On 2018-06-16 11:40 IST   |   Update On 2018-06-16 11:40:00 IST
ரம்ஜான் கொண்டாடும் இந்த நன்னாளில் சமூக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் பிணைப்பு மேலும் பலப்படட்டும் என பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். #EidMubarak #EidCelebration #ModiRamzanWishes
புதுடெல்லி:

நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர். மேலும், ரம்ஜான் கொண்டாடும் மக்களுக்கு தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ரம்ஜானை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ஈத் முபாரக். நமது சமூகத்தின் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் பிணைப்பு இந்த நாளில் மேலும் பலப்படட்டும்”என குறிப்பிட்டுள்ளார்.



முன்னதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் பன்முகத்தன்மை கொண்ட நாட்டு மக்களிடையே சகோதரத்துவம் நிலவட்டும் என குறிப்பிட்டிருந்தார். #EidMubarak #EidCelebration #ModiRamzanWishes

Tags:    

Similar News