செய்திகள்
மேற்கு வங்காள கவர்னர் திரிபாதிக்கு கூடுதல் பொறுப்பாக திரிபுரா ஒதுக்கீடு - ஜனாதிபதி மாளிகை
மேற்கு வங்காள கவர்னர் கேஷரி நாத் திரிபாதி கூடுதல் பொறுப்பாக திரிபுரா மாநில கவர்னராகவும் செயல்படுவர் என ஜனாதிபதி மாளிகை இன்று அறிவித்துள்ளது. #KeshariNathTripathi
புது டெல்லி :
திரிபுரா மாநில கவர்னர் டதகாத ராய் விடுமுறையில் சென்றிருப்பதால், மேற்கு வங்காள கவர்னர் கேஷரி நாத் திரிபாதிக்கு அம்மாநில கவர்னர் பொறுப்பை கூடுதலாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒதுக்கீடு செய்துள்ளார் என ஜனாதிபதி மாளிகை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆனால், திரிபுரா மாநில கவர்னர் டதகாத ராய் விடுமுறையில் சென்றிருப்பதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #KeshariNathTripathi