செய்திகள்

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் வெடித்து சிதறி விபத்து - விமானி பலி

Published On 2018-06-05 07:33 GMT   |   Update On 2018-06-05 07:33 GMT
குஜராத் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் வெடித்து சிதறியதில் விமானி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Jaguarcrash #Sanjaychauhan
காந்திநகர்:

குஜராத் மாநிலம் ஜம்நகர் மாவட்டத்தில் இந்திய விமானப்படையின் பயிற்சி முகாம் உள்ளது. இந்நிலையில், இன்று காலை விமானப்படை வீரர் சஞ்சய் சவுகான் வழக்கமான பயிற்சி ஈடுபட்டிருந்தார். விமானம் பரிஜா கிராமத்தில் சென்று கொண்டிருந்த போது அவர் பயணம் செய்த ஜாகுவார் போர் ஜெட் விமானம் சுமார் 10.30 மணியளவில் வெடித்து சிதறியது. விமானத்தின் பாகங்கள் கிராமத்தின் பல இடங்களில் சிதறி விழுந்தன.


விபத்தில் படுகாயமடைந்த விமானி சஞ்சய் சம்பவ பரிதாபமாக உயிரிழந்தார். விபத்திற்கான காரணம் தெரியவில்லை. விபத்து குறித்து நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும் என விமானப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.  #Jaguarcrash #Sanjaychauhan

Tags:    

Similar News