செய்திகள்

மராட்டிய மாநிலத்தில் தீக்குளிக்க முயன்ற 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

Published On 2018-06-04 20:14 GMT   |   Update On 2018-06-04 20:14 GMT
மராட்டிய மாநிலத்தில் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்ற 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
அமராவதி:

விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட விளைபொருட்களுக்கான பாக்கி தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மராட்டிய மாநிலம் அமராவதி நகரில் காங்கிரஸ் கட்சியினர் சமீபத்தில் அமைதி பேரணி நடத்தினார்கள்.

இந்த நிலையில், அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அமராவதி நகரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் அருகே வீரரேந்திர ஜக்தாப், யாஷ்மோமாதி தாக்குர் என்ற இரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று தீக்குளிப்பதற்காக மண்எண்ணெய் கேனுடன் வந்தனர். அவர்கள் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைக்கும் முன் போலீசார் பாய்ந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். எம்.எல்.ஏ.க்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர். 
Tags:    

Similar News