செய்திகள்

குஜராத்தில் தலித் தொழிலாளி தூணில் கட்டி வைத்து கொடூரமாக அடித்துக்கொலை

Published On 2018-05-21 12:51 IST   |   Update On 2018-05-21 12:51:00 IST
குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் திருடன் என எண்ணி தலித் தொழிலாளி தூணில் கட்டி வைத்து கொடூரமாக அடித்துக்கொன்ற வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #GujaratIsNotSafe4Dalit
அகமதாபாத்:

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நேற்று அதிகாலை முகேஷ் வனியா என்பவர் தனது மனைவி மற்றும் உறவினருடன் சேர்ந்து தேவையற்ற பொருட்களை எடுக்க சென்றனர். அப்போது அங்கிருந்த தொழிற்சாலை நிர்வாகிகள் அவர்களை தடுத்தனர். திருடர்கள் என எண்ணி முகேஷ் வனியாவை கயிற்றால் கட்டினர்.  அதனை தடுக்க முயன்ற முகேஷின் மனைவியையும் தாக்கினர்.

இதையடுத்து அவர் தனது உறவினர்களை அழைத்துச் செல்ல சென்றுவிட்டார். அவர் வருவதற்குள் முகேஷை அவர்கள் இரும்புக்கம்பியால் கொடூரமாக அடித்தனர். அவர் வலியால் துடித்த போதும் நிறுத்தாமல் தாக்கினர். படுகாயமடைந்த முகேஷை அவர் மனைவி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் முகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அதனை கண்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், குஜராத் தலைவர் ஜிக்னேஷ் மவானி இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பல தலைவர்கள் சமூக ஊடகங்களில் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #GujaratIsNotSafe4Dalit

Tags:    

Similar News