செய்திகள்

நீதியை நிலைநாட்ட சுப்ரீம் கோர்ட் இருப்பதற்காக கடவுளுக்கு நன்றி - சிதம்பரம்

Published On 2018-05-19 09:15 GMT   |   Update On 2018-05-19 09:15 GMT
கர்நாடகத்தில் நீதியை நிலைநாட்ட சுப்ரீம் கோர்ட் இருப்பதற்காக கடவுளுக்கு நன்றி என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார். #KarnatakaElection #FloorTest #Chidambaram
புதுடெல்லி:

கர்நாடக சட்டசபையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு முழுவதையும் வீடியோ எடுப்பதுடன், நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இந்நிலையில், கர்நாடக சட்டசபையில் நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதற்கு முன்னாள் நிதி மந்திரி சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.



இதுதொடர்பாக ப.சிதம்பரம் டுவிட்டரில் கூறுகையில், பாஜகவின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் தோற்கடிக்கப்பட்டு வருகின்றன. நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பாவை காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள் நிச்சயம் தோற்கடிப்பார்கள்.

சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டுக்கு எனது வணக்கங்கள். நீதியை நிலைநாட்ட சுப்ரீம் கோர்ட் இருப்பதற்காக கடவுளுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார். #KarnatakaElection #FloorTest #Chidambaram 
Tags:    

Similar News