செய்திகள்

எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா

Published On 2018-05-19 13:52 IST   |   Update On 2018-05-19 13:52:00 IST
கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா, ஸ்ரீராமுலு மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த புட்டாராஜு ஆகியோர் தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். #YeddyurapparesignsMPpost
பெங்களூரு:

சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா ஷிகாரிபுரா தொகுதியிலும், அதே கட்சியை சேர்ந்த ஸ்ரீராமுலு மோலகல்மூர் தொகுதியிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த புட்டாராஜு மண்டியா தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இதைதொடர்ந்து, கர்நாடக முதல் மந்திரியாக கடந்த 17-ம் தேதி பதவி ஏற்றுகொண்ட எடியூரப்பா இன்று எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பதற்கு முன்னதாக தனது பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து ஸ்ரீராமுலு, புட்டாராஜு ஆகியோரும் தங்களது பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். #YeddyurapparesignsMPpost

Tags:    

Similar News