search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MP Post"

    சமீபத்தில் பதவி விலகிய ஆஸ்திரேலியா முன்னாள் பிரதமர் மால்கோல்ம் டர்ன்புல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். #Turnbulltoresign ##Turnbull
    கான்பெரா:

    ஆஸ்திரேலியாவில் சமீபகாலமாக அரசியல் நிலையற்றத்தன்மை நிலவி வருகிறது. ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டு அடிக்கடி புதிய பிரதமர்கள் பதவி ஏற்று வருகின்றனர்.

    லிபரல் கட்சியை சேர்ந்த மால்கோல்ம் டர்ன்புல் கடந்த 3 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வந்தார். உள்கட்சியில் இவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. அதில் அவர் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துக்கொண்டார்.

    ஆனால் அவருக்கு எதிராக ஆட்சியில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. உள்துறை மந்திரி பீட்டர் டட்டன் உள்ளிட்ட 3 மந்திரிகள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், பிரதமர் பதவியில் நிலைக்க அவர் மீண்டும் ஓட்டெடுப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    பிரதமர் பதவிக்கு தான் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என மால்கோல்ம் டர்ன்புல் அறிவித்தார். வெளியுறவு மந்திரி ஜுலி பிஷ்ப், பொருளாளர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டனர்.

    அவர்களில் ஸ்காட் மாரிசன் கூடுதல் ஓட்டுகள் பெற்றார். இதைதொடர்ந்து, மால்கோல்ம் டர்ன்புல் பதவி இழந்தார். ஆஸ்திரேலியா மக்கள் கடந்த பத்தாண்டுகளில் சந்தித்த ஆறாவது பிரதமராக ஸ்காட் மாரிசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் வரும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதுவரை ஸ்காட் மாரிசன் பிரதமராக பதவி வகிப்பார் என தெரிகிறது. தனது தலைமையிலான புதிய மந்திரிசபைக்கான பட்டியலை ஸ்காட் மாரிசன் தயாரித்து வருகிறார்.

    இந்நிலையில், சிட்னி வென்ட்வொர்த் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக உள்ள மால்கோல்ம் டர்ன்புல் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதனால், 149 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் ஆளும் லிபரல் கட்சியின் பலம் 75 ஆக குறையும்.

    இந்த வார இறுதிக்குள் மால்கோல்ம் டர்ன்புல் முறையாக ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் டோனி ஸ்மித்திடம் சமர்ப்பித்த பின்னர் வென்ட்வொர்த் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும்.

    இந்த தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டோனி அபாட்டின் சகோதரி கிறிஸ்டைன் போர்ஸ்ட்டர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #Turnbulltoresign  #Turnbull
    கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா, ஸ்ரீராமுலு மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த புட்டாராஜு ஆகியோர் தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். #YeddyurapparesignsMPpost
    பெங்களூரு:

    சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா ஷிகாரிபுரா தொகுதியிலும், அதே கட்சியை சேர்ந்த ஸ்ரீராமுலு மோலகல்மூர் தொகுதியிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த புட்டாராஜு மண்டியா தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

    இதைதொடர்ந்து, கர்நாடக முதல் மந்திரியாக கடந்த 17-ம் தேதி பதவி ஏற்றுகொண்ட எடியூரப்பா இன்று எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பதற்கு முன்னதாக தனது பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து ஸ்ரீராமுலு, புட்டாராஜு ஆகியோரும் தங்களது பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். #YeddyurapparesignsMPpost

    ×