செய்திகள்

ரூ.200 கோடி கொடுத்தாலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் விலைபோக மாட்டார்கள் - தேவேகவுடா

Published On 2018-05-18 14:58 IST   |   Update On 2018-05-18 14:58:00 IST
குதிரை பேரத்தில் 200 கோடி ரூபாய் கொடுத்தாலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் விலைபோக மாட்டார்கள் என தேவேகவுடா தெரிவித்துள்ளார். #KarnatakaCMrace #Devegowda
ஐதராபாத்:

கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு உள்ள பெரும்பான்மையை நாளை மாலை 4 மணிக்கு நிரூபிக்குமாறு சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ள நிலையில், ஐதராபாத் நகரில் முகாமிட்டுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் 37 பேரும் பெங்களூரு புறப்படுகின்றனர்.



மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜ.க. 100 கோடி ரூபாய்வரை பேரம் பேசுவதாகவும், மந்திரி பதவிகளை அளிப்பதாக கூறி ஆசைகாட்டி வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், ஐதராபாத் நகரில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவே கவுடா, ‘100 கோடி அல்ல, 200 கோடி கொடுத்தாலும் எங்கள் எம்.எல்.ஏ.க்கள் விலைபோக மாட்டார்கள். அவர்கள் எங்களுடன்தான் இருக்கிறார்கள். இன்று மாலை அல்லது நாளை அதிகாலை நாங்கள் பெங்களூருவுக்கு புறப்பட்டு செல்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளார். #KarnatakaCMrace #Devegowda
Tags:    

Similar News