செய்திகள்
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் - இந்திய வீரர் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரில் ஜம்மு மாவட்டத்திற்கு உட்பட்ட ஆர்.எஸ்.பொரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பி.எஸ்.எப் வீரர் ஒருவர் உயிரிழந்தார். #PakistanArmyViolates
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு மாவட்டத்திற்கு உட்பட்ட ஆர்.எஸ்.பொரா செக்டாரில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலுக்கு இந்திய படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். ஆனாலும், இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த பி.எஸ்.எப். வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன் சம்பா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பி.எஸ்.எப். வீரர் ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது. #PakistanArmyViolates