செய்திகள்
ஓய்வூதியம் பெறுவதற்கு ஆதார் கட்டாயம் இல்லை- மத்திய அரசு அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை என மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். #AadhaarCard #aadhaarpension
புதுடெல்லி:
மத்திய அரசின் அனைத்து சலுகைகளை பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டது. சிம் கார்டு வாங்குவது முதல் அனைத்துக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்துள்ள சுப்ரீம் கோர்ட், தனது தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், தன்னார்வ நிறுவனங்களுடனான சந்திப்பில் இன்று கலந்துகொண்ட இணை மந்திரி ஜிதேந்திர சிங், பணி ஓய்வு பெற்ற மூத்த மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவதில் சிரமம் அடைவதாக தெரிவிக்கின்றனர். எனவே, மத்திய அரசு ஓய்வூதியம் பெறுவதற்கு ஆதார் கட்டாயம் என்ற உத்தரவை தளர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். #AadhaarCard #aadhaarpension
மத்திய அரசின் அனைத்து சலுகைகளை பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டது. சிம் கார்டு வாங்குவது முதல் அனைத்துக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்துள்ள சுப்ரீம் கோர்ட், தனது தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.