செய்திகள்

தலைக்கு ரூ.9 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட இரு நக்சலைட்கள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

Published On 2018-05-13 15:34 GMT   |   Update On 2018-05-13 15:34 GMT
ஒடிசா மாநிலத்தில் தலைக்கு 9 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த இரண்டு நக்சலைட்களை பாதுகாப்பு படையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.

புவனேஷ்வர்:

ஒடிசா மாநிலம், பாலங்கிர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தலைக்கு 9 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஒடிசா மாநிலம், பாலங்கிர் மாவட்டத்தில் உள்ள துட்கமல் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக நக்சல் ஒழிப்பு சிறப்பு கூட்டுப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சிறப்பு அதிரடிப்படை மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காட்டுக்குள் பதுங்கி இருந்த நக்சலைட்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். 

இருதரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் ஒடிசா மாநில அரசின் சார்பில்  தலைக்கு 9 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த  சஞ்சிப் மற்றும் ராகேஷ் ஆகிய இரு நக்சலைட்கள் கொல்லப்பட்டதாக அம்மாநில நக்சல் ஒழிப்பு சிறப்புப் படையினர் இன்று தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News