செய்திகள்

காஷ்மீர் பெண்கள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கெஜ்ரிவாலிடம் பேசிய முப்தி

Published On 2018-05-12 23:07 IST   |   Update On 2018-05-12 23:07:00 IST
காஷ்மீர் பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி தொலைபேசியில் பேசினார். #Kashmirpeopleattack #MehboobaMufti #ArvindKejriwal
புதுடெல்லி: 

புதுடெல்லியின் சன்லைட் காலனி என்ற பகுதியில் வசிக்கும் காஷ்மீரை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 5 பேர் மீது கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதி மக்கள் திடீரென தாக்கினர். 

இதுதொடர்பாக தாக்குதலுக்கு உள்ளானவர்கள் கூறுகையில், இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் அச்சத்துடனேயே வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி காஷ்மீர் பெண்கள் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இதுதொடர்பாக டெல்லி முதல் மந்திரி அலுவலக அதிகாரிகள் கூறுகையில், முதல் மந்திரி கெஜ்ரிவாலிடம் ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி முப்தி தொலைபேசியில் பேசினார். அப்போது, காஷ்மீர் பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பேசி, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். அவரிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார் என தெரிவித்துள்ளனர். #Kashmirpeopleattack #MehboobaMufti #ArvindKejriwal
Tags:    

Similar News