செய்திகள்

பெற்றோரை கைவிட்டால் இனி 6 மாதம் சிறை - விரைவில் வருகிறது புதிய சட்டம்

Published On 2018-05-12 16:06 IST   |   Update On 2018-05-12 16:06:00 IST
வயது முதிர்ந்த பெற்றோரை கைவிடுபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கக்கூடிய புதிய சட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்கவுள்ளது. #abandoningparents
புதுடெல்லி:

வயது முதிர்ந்த பெற்றோர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்த வரைவு அறிக்கையை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தயாரித்துள்ளது. அந்த அறிக்கையில், தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள், மருமகன், பேரன் போன்றவர்களும், மூத்த பெற்றோர்களை பாதுகாக்க வேண்டும் என சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும், பராமரிப்புக்கென அறிவிக்கப்பட்டுள்ள அதிகபட்ச தொகையான 10 ஆயிரம் ரூபாய் என்ற கட்டுப்பாட்டை நீக்கி, அதிகமாக சம்பாதிக்கும் பிள்ளைகள் அதற்கேற்ப பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் எனவும், வயது முதிர்ந்த தனது பெற்றோர்களை கைவிடுபவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 3 மாத சிறை தண்டனையை 6 மாதமாக உயர்த்தவும் அந்த வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகவலை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். #abandoningparents
Tags:    

Similar News