செய்திகள்
ஐதராபாத்தில் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் காதலி கழுத்தறுத்து கொலை
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் கொடூரமான முறையில் தனது காதலியை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத்:
நாடு முழுவதும் காதல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்காக அரசும் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது.
இந்நிலையில், ஐதராபாத் பகுதியில் உள்ள ஒரு விடுதியில், தனது காதலியை கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், வங்கி தேர்வுகளுக்காக பயின்று வரும் அந்த பெண், காதலனுக்கு போதிய வருமானம் இல்லை என்பதால் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த காதலன், அந்த பெண்ணை கொடூரமாக தாக்கி, கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். #manmurderslover #lovekills
நாடு முழுவதும் காதல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்காக அரசும் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது.
இந்நிலையில், ஐதராபாத் பகுதியில் உள்ள ஒரு விடுதியில், தனது காதலியை கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், வங்கி தேர்வுகளுக்காக பயின்று வரும் அந்த பெண், காதலனுக்கு போதிய வருமானம் இல்லை என்பதால் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த காதலன், அந்த பெண்ணை கொடூரமாக தாக்கி, கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். #manmurderslover #lovekills