செய்திகள்

மணிப்பூர் மற்றும் மேகாலயா உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம்

Published On 2018-05-11 12:37 GMT   |   Update On 2018-05-11 12:37 GMT
மணிப்பூர் மற்றும் மேகாலயா மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமனம் செய்து மத்திய சட்ட அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #NewChiefJustices
புது டெல்லி:

ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதிகள் இருவர் மணிப்பூர் மற்றும் மேகாலயா மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய சட்ட அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:-

ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் ராமலிங்கம் சுதாகர் மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மற்றொரு ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதி முகமது யாகூப் மிர் மேகாலயா மாநில தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மாற்றப்பட்டதை அடுத்து, அதே நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி அலோக் அராதே தற்காலிக தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். #NewChiefJustices
Tags:    

Similar News