செய்திகள்

நிலச்சரிவில் சிக்கி தாய், மகள் உள்பட 3 பேர் பலி

Published On 2018-04-28 01:36 IST   |   Update On 2018-04-28 01:36:00 IST
உத்தரகான்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தாய், மகள் உள்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.
உத்தரகாசி:

உத்தரகான்ட் மாநிலத்தில் உள்ள நகரம் உத்தரகாசி. இங்கு கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழந்துள்ளது.

இந்நிலையில், உத்தரகாசியில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி தாய் மற்றும் 3-வயது மகள் உள்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பல வாகனங்கள் சிக்கின.

தகவலறிந்து பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்களை மீட்டனர். விசாரணையில், அவர்கள் ராகேஷ், கவிதா மற்றும் அவரது மகள் சிருஷ்டி என தெரிய வந்தது. தொடர்ந்து அந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #Tamilnews

Similar News