செய்திகள்

ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் தீ விபத்து

Published On 2018-01-29 11:49 GMT   |   Update On 2018-01-29 11:49 GMT
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தால் விமானச் சேவைகள் சற்று நேரத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டது.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கோடைக்கால தலைநகரான ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இந்திய விமானப்படை விமானங்கள் நிறுத்தப்படும் பகுதியில் இன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து புறப்பட்டு செல்லும், வந்துசேரும் விமானச் சேவைகள் சற்று நேரத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டது.

ஓடுபாதைக்கு அருகாமையில் உள்ள புல்வெளியில் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்ட பின்னர் விமானச் சேவைகள் அனுமதிக்கப்பட்டதாகவும் இந்த விபத்தால் சேதாரம் எதுவும் ஏற்படவில்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News