செய்திகள்

காஷ்மீர்: பாதுகாப்பு பணியிலிருந்த ராணுவ வீரர் துப்பாக்கியுடன் மாயம் - விசாரணைக்கு உத்தரவு

Published On 2017-07-06 10:27 IST   |   Update On 2017-07-06 10:27:00 IST
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமிலிருந்து ஏ.கே-47 ரக துப்பாக்கியுடன் ஸாகூர் தாகுர் என்பவர் இன்று மாயமாகியுள்ளார்.
ஸ்ரீநகர்:

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் கந்த்முல்லா என்ற பகுதியில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே ராணுவ முகாம் உள்ளது. இம்முகாமில் இருந்து எல்லையை இந்திய வீரர்கள் கண்காணிக்கின்றனர். இந்நிலையில், இதே மாநிலம் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த ஸாகூர் தாகுர் என்பவர் இம்முகாமில் பணியாற்றி வந்துள்ளார்.

இன்று அதிகாலை முதல் ஏ.கே-47 ரக துப்பாக்கியுடன் தாகுர் மாயமாகியுள்ளார். கையில் துப்பாகியுடன் மாயமாகியுள்ளதால், தீவிரவாதிகள் யாரும் கடத்திச்
சென்றிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

ராணுவத்தின் சார்பிலும் தாகுர் மாயமானது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Similar News