செய்திகள்

காஷ்மீரில் காங்கிரஸ் பிரமுகர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு

Published On 2016-12-27 15:57 GMT   |   Update On 2016-12-27 15:57 GMT
காஷ்மீரில் காங்கிரஸ் பிரமுகர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில்  உள்ள அஷ்டென்கோ பகுதியில் பஹீர் அகமது ஷேக் என்பவர் வசித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் மீது 7.30 மணியளவில் வீட்டில் இருந்தார்.

அப்போது, இவரை குறிவைத்து அல்ட்ராஸ் பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ஷேக்,  உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகள் தப்பி ஓடியதாக தெரிகிறது.

Similar News