இந்தியா

12 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்- டி.சி.எஸ். சந்தை மதிப்பில் 28 ஆயிரம் கோடி இழப்பு

Published On 2025-07-30 19:28 IST   |   Update On 2025-07-30 19:28:00 IST
  • மும்பை பங்கு சந்தையில் டி.சி.எஸ்-ன் பங்கு 0.73 சதவீதம் குறைந்து ரூ.3,056. ஆனது.
  • தேசிய பங்கு சந்தையில் 0.72 சத வீதம் குறைந்து ரூ.3057 ஆனது.

வளர்ந்து வரும் ஏ.ஐ. தொழில்நுட்பம் உலகம் முழுக்கவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஏ.ஐ. வரவால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கிலான தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். குறிப்பாக ஐ.டி. நிறுவனங்கள் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ். இந்த ஆண்டு அதன் உலகம் முழுவதிலும் இருந்து பணி புரியும் 12,261 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக 2 நாட்களில் பங்கு சந்தையில் ரூ .28,148 கோடியை அந்நிறுவனம் இழந்துள்ளது.

நேற்று மும்பை பங்கு சந்தையில் டி.சி.எஸ்-ன் பங்கு 0.73 சதவீதம் குறைந்து ரூ.3,056. ஆனது. தேசிய பங்கு சந்தையில் 0.72 சத வீதம் குறைந்து ரூ.3057 ஆனது.

இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் டி.சி.எஸ். நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.28,148.72 கோடி குறைந்து ரூ.11,05,886.54 கோடியாக உள்ளது.

Tags:    

Similar News