இந்தியா

12%, 28% வரி அடுக்குகளை நீக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் - முக்கிய மாற்றங்கள் அறிவிப்பு!

Published On 2025-09-03 22:48 IST   |   Update On 2025-09-04 00:15:00 IST
  • இந்த வருட தீபாவளிக்கு மக்களுக்கு பரிசு காத்திருப்பதாக பிரதமர் மோடி கூறியிருந்தார்.
  • நிர்மலா சீதாராமன் அவற்றை அறிவித்தார்.

இந்த வருட தீபாவளிக்கு மக்களுக்கு பரிசு காத்திருப்பதாக பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தனது சுதந்திர தின உரையில் கூறியிருந்தார். அதன்படி ஜிஎஸ்டி வரியில் முக்கிய சீர்திருத்தங்கள் செய்ய மத்திய அரசு முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.

இதற்கிடையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கணித்தபடி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தின் பின் செய்தியாளர் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் அவற்றை அறிவித்தார்.

அதன்படி, "5, 12, 18, 28 என நான்கு அடுக்காக இருந்த ஜிஎஸ்டி அடுக்குகளை 2 ஆக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்படுகின்றன.

5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.

மேலும் 5, 18 சதவீதத்துடன் சிறப்பு வரிவிதிப்பாக 40 சதவீத வரிவிதிப்பும் அமையும். இதைத்தவிர்த்து உயிர்காக்கும் மருந்துகளுக்கு 12%  ஆக இருந்த வரி பூஜ்யமாக குறைகிறது. பால், பிரட், பன்னீர் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 

அனைத்து மோட்டார் வாகன உதிரி பாகங்களுக்கும் 18 சதவீத வரி விதிக்கப்படும். டிராக்டர்கள், வேளாண் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.

வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் 5 சதவீத வரி அடுக்குக்குள் கொண்டுவரப்படும். சாமானிய மக்களுக்கான பொருட்களுக்கு 5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும்" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News