இந்தியா
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தன்று அயோத்திக்கு 100 விமானங்கள் வரும்- யோகி ஆதித்யநாத்
- இண்டிகோ விமான சேவை தொடக்க விழா காணொலி மூலம் இன்று நடந்தது.
- உத்தரபிரதேசத்தில் 1 மாதத்துக்குள் 5 புதிய விமான நிலையங்கள் திறக்கப்படும்.
லக்னோ:
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக அயோத்தியில் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி கடந்த 30-ந்தேதி திறந்து வைத்தார்.
இந்நிலையில் அயோத்தி-அகமதாபாத் இடையேயான இண்டிகோ விமான சேவை தொடக்க விழா காணொலி மூலம் இன்று நடந்தது. உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் லக்னோவில் இருந்தும், மத்திய விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா டெல்லியில் இருந்தும் விழாவில் இணைந்தனர்.
அப்போது யோகி ஆதித்யநாத் பேசும்போது, வருகிற 22-ந்தேதி அயோத்தி விமான நிலையத்துக்கு 100 விமானங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறும்போது, "உத்தரபிரதேசத்தில் 1 மாதத்துக்குள் 5 புதிய விமான நிலையங்கள் திறக்கப்படும். இதன்மூலம் அங்கு 19 விமான நிலையங்களாக உயரும்" என்றார்.