கதம்பம்

கொழுப்பு தான் காரணமா...

Published On 2023-06-27 09:03 GMT   |   Update On 2023-06-27 09:03 GMT
  • கொழுப்பு தேவையென்றால் உடலே அதனை உருவாக்கிக் கொள்ளும்.
  • கொழுப்புள்ள உணவுகளைச் சாப்பிட்டால் மட்டும்தான் கொழுப்புகள் உருவாகும் என்பது கற்பனைதான்.

இதயத்தில் அல்லது ரத்தத்தில் கொழுப்பு உருவாவதற்கோ அல்லது அடைப்பு ஏற்படுவதற்கோ கொழுப்பு அதிகமுள்ள உணவுகளே காரணம் என்று மருத்துவ விஞ்ஞானிகளும், பன்னாட்டு மருந்து நிறுவனத்தினரும் கூறிவருகிறார்கள்.

ஆட்டினுடைய உடல் அமைப்பில் இயல்பாகவே கொழுப்பு அதிகமாக இருக்கும். உடலில் எந்த அளவு தசை இருக்கிறதோ, அதே அளவு கொழுப்பும் இருக்கும். இவ்வளவு கொழுப்பு உருவாவதற்கு ஆடு எவ்வளவு கொழுப்பை உணவாக உட்கொண்டிருக்க வேண்டும்?

ஆனால், ஆடு சுத்த சைவம். சைவ உணவுகளை மட்டும் அதிலும் இயற்கையான, சமைக்காத உணவுகளை மட்டுமே ஆடுகள் சாப்பிடுகின்றன. ஆனால் இவ்வளவு கொழுப்பு ஆட்டிற்கு எங்கிருந்து வந்தது?

கொழுப்பு தேவையென்றால் உடலே அதனை உருவாக்கிக் கொள்ளும். கொழுப்புள்ள உணவுகளைச் சாப்பிட்டால் மட்டும்தான் கொழுப்புகள் உருவாகும் என்பது கற்பனைதான்.

நாம் உண்ணும் முறைதான் நோய்களை உருவாக்குகிறது. பசியில்லாத நேரத்தில் நீங்கள் சாப்பிடும் உணவு சைவமாக இருந்தால் கூட, அதிலிருந்து கொழுப்பு உருவாக வாய்ப்பிருக்கிறது. பசியோடு இருக்கும் நேரத்தில் நீங்கள் சாப்பிடும் உணவு அசைவமாக, கொழுப்பு அதிகம் இருக்கும் உணவாக இருந்தாலும், அதிலிருந்து உடலிற்குத் தேவையில்லாத கொழுப்பு உருவாகாது.

அதே போல, கொழுப்பு என்றவுடன் நமக்கு ஒருவித பயம் ஏற்படுகிறது. உண்மையில் கொழுப்பு உடலிற்கு அவசியமான சத்துக்களில் ஒன்று. நம் உடலின் உள்ளுறுப்புகளின் முழுமையான உருவாக்கத்திற்கு கொழுப்பு அவசியம். நம் உடலின் ஒவ்வொரு செல்லும் கொழுப்பால் ஆன வெளிச்சுவரைக் கொண்டிருக்கிறது. கொழுப்பைக் குறைக்கிறேன் பேர்வழி என கடுமையான டயட்டில் இருப்பது, காம்பவுண்ட் சுவரே இல்லாமல் வீடு கட்டுவது போன்ற பாதுகாப்பற்ற நிலைக்கு நம் உடலை ஆளாக்கிவிடும்.

-உமர் பாரூக்

Tags:    

Similar News

இலவசம்