உள்ளூர் செய்திகள்

35-வது நாளாக 102 அடியில் நீடிக்கும் பவானிசாகர் அணை நீர்மட்டம்

Published On 2022-09-09 10:45 GMT   |   Update On 2022-09-09 15:41 GMT
  • இன்று தொடர்ந்து 35-வது நாளாக பவானி சாகர் அணை 102 அடியில் நீடிக்கிறது.
  • தொடர்ந்து மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வழிகின்றது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பவானிசாகர், வரட்டு பள்ளம் , குண்டேரி பள்ளம் பெரும்பள்ளம் ஆகிய அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

பவானிசாகர் அணை யின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்து வருவதால் கடந்த மாதம் 5-ந் தேதி முதல் 102 அடியில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இன்று தொடர்ந்து 35-வது நாளாக பவானி சாகர் அணை 102 அடியில் நீடிக்கிறது.

அணைக்கு வினாடிக்கு 4, 200 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.அணையில் இருந்து பாசனத்திற்கா–கவும், குடிநீருக்காகவும் 4,000 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

இதேபோல் மாவட்டத்தில் மற்ற பிரதான அன்னையான வரட்டுபள்ளம் அணையும் தனது முழு கொள்ளளவை எட்டி வருகிறது. 33.50 அடி கொண்ட வரட்டுபள்ளம் அணை இன்று காலை நிலவரப்படி வரட்டுபள்ளம் அணை 33.46 அடியாக உள்ளது.

இதே போல் 41.75 அடி கொண்ட குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.74 அடியாக உள்ளது. இதே போல் 30.84 அடி கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21.13 அடியாக உள்ளது.

தொடர்ந்து மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வழிகின்றது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News