செய்திகள்

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிப்பு

Published On 2019-05-29 12:40 GMT   |   Update On 2019-05-29 12:40 GMT
நாங்குநேரி எம்எல்ஏ வசந்தகுமார் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் எச்.வசந்தகுமார், கடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். இந்த நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் காங்கிரசும் இடம்பெற்றது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இனி எம்.பி. அடையாளத்துடன் மக்களவைக்கு செல்ல இருப்பதால் எச்.வசந்த குமார் ஏற்கெனவே வகித்து வந்த எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்தார். சென்னை தலைமைச் செயலகத்திற்கு சென்று, சபாநாயகரை சந்தித்து, எம்எல்ஏ பதவியில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்தார். அவரது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். 
Tags:    

Similar News