செய்திகள்
மண்ணடியில் விடுதியில் தங்கி இருந்தவரிடம் ரூ. 3½ லட்சம் பறிமுதல்
மண்ணடியில் விடுதியில் தங்கி இருந்தவரிடம் ரூ. 3½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019
ராயபுரம்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி மண்ணடி, பாரிமுனை, சென்ட்ரல் பகுதியில் உள்ள விடுதிகளில் வெளியாட்கள் யாரேனும் தங்கி உள்ளனரா? என்று போலீசார் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர்.
மண்ணடி, ராமசாமி தெருவில் உள்ள விடுதியில் சோதனை நடத்திய போது தென்காசியை சேர்ந்த நாகூர் மெய்தீன் என்பவர் தங்கி இருந்தார்.
அவர் வைத்திருந்த பையில் ரூ. 3½ லட்சம் ரொக்கம் இருந்தது. இந்த பணத்துக்கான ஆவணம் நாகூர் மொய்தீனிடம் இல்லை.
இதுபற்றி தேர்தல் பறக்கும் படையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் விரைந்து வந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
உரிய ஆவணத்தை சமர்ப்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளும்படி நாகூர் மொய்தீனிடம் தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். #LokSabhaElections2019