மதுராந்தகம், அச்சரபாக்கத்தில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் தீவிர வாக்கு சேகரிப்பு
திருப்போரூர்:
காஞ்சி பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம்குமரவேல், மதுராந்தகம் நகராட்சியில் 24 வார்டுகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார் மற்றும் கருங்குழி பேரூராட்சி, அச்சரபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கிராம மக்களின் முக்கிய அடிப்படைத்தேவைகளை மீண்டும் வெற்றிபெற்றால் செய்து தருவதாக உறுதியளித்து வாக்குகள் சேகரித்தார்.
மதுராந்தகம் பகுதியில் எம்.ஜி.ஆர் வேடமணிந்த தொண்டருடன் வேட்பாளர் மரகதம்குமரவேல் வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரித்தார். வேட்பாளருடன் அ.தி.மு.க. மாநில இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, ஒன்றிய செயலாளர் அப்பா துரை, நகரசெயலாளர் ரவி, கருங்குழி பழனி, மஞ்சுளா புருஷோத்தமன், அச்சரபாக்கம் மெய்யப்பன், சுப்பிரமணி, முருகதாஸ், பா.ம.க மாநில துணைசெயலாளர் பொன். கங்காதரன், மாவட்ட செயலாளர் கோபால கண்ணன், தேமுதிக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், பா.ஜ.க நிர்வாகிகள் செந்தமிழரசு, தயாளன், ருத்திரகோட்டி, பாலாஜி, த.மா.கா. ஆதிகேசவலு, பழனி, புரட்சிபாரதம் உள்ளிட்ட கூட்டணியினர் சென்று ஆதரவு திரட்டினர்.