செய்திகள்

டாக்டர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் நடந்து சென்று வாக்கு சேகரிப்பு

Published On 2019-04-08 08:50 GMT   |   Update On 2019-04-08 08:50 GMT
வடசென்னை திமுக வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வீதி, வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். #LokSabhaElections2019 #DMK

சென்னை:

வடசென்னை தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வீதி, வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

திரு.வி.க. பஸ் நிலையத்தில் திறந்த வேனில் பிரசாரம் செய்த பிறகு மு.க.ஸ்டாலின் வாகனத்தில் இருந்து இறங்கி வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

நடைபெற இருக்கும் தேர்தல் இந்தியாவின்தலையெழுத்தை மாற்ற போகிற தேர்தல். எனவே உங்கள் வாக்குகளை சரியான முறையில் பயன்படுத்துங்கள். மோடி இந்தியாவில் இருப்பதே இல்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் தான் இந்தியாவை சுற்றி சுற்றி வருகிறார். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களை பற்றி சிந்திப்பதில்லை. எனவே மத்தியில் நிலையான நல்லதொரு ஆட்சி அமைய தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து இந்த தொகுதியில் போட்டியிடும் படித்தவரும் மருத்துவருமான டாக்டர் கலாநிதி வீராசாமியை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #DMK

Tags:    

Similar News