செய்திகள்
தூத்துக்குடி நகரில் 108 கிலோ தங்கம் பறிமுதல்
தூத்துக்குடி நகரில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 108 கிலோ தங்கத்தை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்துள்ளனர். #108KgGold #LSPolls
தூத்துக்குடி:
பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி தூத்துக்குடி நகரில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 108 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தங்க நகைகளை பறிமுதல் செய்து ஓட்டுநர் ஹரிஹரனிடம் தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர்.
உரிய ஆவணமின்றி நகைக்கடைகளில் விநியோகிக்க கர்நாடகாவிலிருந்து தங்கம் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆவணங்களைக் காட்டிவிட்டு பிறகு தங்கத்தைக் கொண்டு செல்ல அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அங்கு பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார். #108KgGold #LSPolls
பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி தூத்துக்குடி நகரில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 108 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தங்க நகைகளை பறிமுதல் செய்து ஓட்டுநர் ஹரிஹரனிடம் தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர்.
உரிய ஆவணமின்றி நகைக்கடைகளில் விநியோகிக்க கர்நாடகாவிலிருந்து தங்கம் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆவணங்களைக் காட்டிவிட்டு பிறகு தங்கத்தைக் கொண்டு செல்ல அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் ஆட்சியர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது.