செய்திகள்

மணப்பாறையில் இன்று உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.1.15 லட்சம் பறிமுதல்

Published On 2019-03-29 07:31 GMT   |   Update On 2019-03-29 07:31 GMT
மணப்பாறை அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSpolls

மணப்பாறை:

பாராளுமன்ற தேர்தலையொட்டி நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்து வந்தால் அதனை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று காலை திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நொச்சிமேடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி செந்தில்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கேரளாவில் இருந்து சென்னை நோக்கி மீன் பாரம் ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று வந்தது. அதனை மறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் அந்த வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்த அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அந்த பணம் மணப்பாறை தாலுகா அலுவ லகத்தில் ஒப்படைக்கப்பட்டது. #LSpolls

Tags:    

Similar News