செய்திகள்
திருவல்லிக்கேணியில் பறக்கும் படை சோதனையில் 150 லேப்டாப்புகள் பறிமுதல்
சென்னை திருவல்லிக்கேணியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 150 லேப்டாப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls
சென்னை:
சென்னை திருவல்லிக்கேணியில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது அதில் 16 பெட்டிகளில் 150 லேப்டாப்புகள் இருந்தன. அதற்கான ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்தனர். #LSPolls